Wednesday, December 23, 2009

தமிழ்படம் ட்ரைலர்

Posted by மின்னல்ப்ரியன் at 7:59 PM 13 comments
தமிழ்படத்தின் முதல் ட்ரைலர் .....பாத்துட்டு எப்புடி இருக்குன்னு சொல்லுங்க .

Saturday, October 31, 2009

சில கவிதைகள் ....பல நினைவுகள்

Posted by மின்னல்ப்ரியன் at 10:33 PM 2 comments



உன்னை பாக்கும் போதெல்லாம்
மனசு
மழை நீரில் குழந்தை விட்ட
கப்பலாய்
மிதக்கிறது .


நீ நடக்கும் போது உன்னுடன்
வருவது
உன் நிழலல்ல
என் இதயம்.

இரவெல்லாம் வருகின்றது
கனவுகள்
கனவெல்லாம்
நீ விட்டு சென்ற சுவடுகள்.


வானவில்லை விட அழகு
வெட்கத்தில்
சிவக்கும்
உன் கன்னங்கள் .


நூறு யுகங்கள் வேண்டுமானாலும்
காத்திருக்கிறேன் ஒரு நொடி திரும்பி
பார்த்து
விட்டு போ !


நான் உனக்கு குறுந்தகவல்
அனுப்பும்
போதெல்லாம் காற்றில்
கடந்து
வருகிறது காதல்.

Thursday, October 22, 2009

செத்தாலும் விடமாட்டானுங்கடா இவனுங்க !

Posted by மின்னல்ப்ரியன் at 8:09 PM 1 comments

போன வாரத்துல ஒரு நாள் AVM ஸ்டியோவுக்கு பின்னாடி இருக்கற
கல்லறைல சூட்டிங். நாங்க பாட்டுக்கு சூட் பண்ணிட்டு இருந்தோம்.
சைடுல நாலஞ்சு பேரு குழி தோண்டிட்டு இருந்தாங்க. என்னடா
மேட்டர்ன்னு பாத்தா அன்னிக்கு மட்டும் ஏழு டெட்பாடிய அடக்கம்
பண்ண போறதா சொன்னாங்க. குழி தோண்டும் போது ஒரு சில
இடத்துல எலும்பு , மண்டை ஓடுன்னு நிறைய வந்து விழுந்துச்சு.
நாங்க அதிர்ச்சியா பாத்தா குழி தோண்டரவரு அசால்ட்டா
கிரிக்கெட் பால் மாதிரி அத எல்லாம் தூக்கி போட்டுட்டு அவரு
வேலைய பாத்துட்டு இருந்தாரு.

நாங்க பாத்துட்டு இருக்கும் போதே மூணு பாடிய அடக்கம்
பண்ணாங்க. நாலாவதா ஒரு டெட்பாடி வந்துச்சு .. அதுக்கு
அப்புறம் நடந்ததுதான் அதிர்ச்சி ...(இதுக்கு மேல படிக்கறவங்க
நீங்களா ஒரு பேய் படம் பாக்கற எபக்கட்டுக்கு வந்துடுங்க)..
நாலாவது டெட்பாடிய அடக்கம் பண்ண நம்ம வெட்டியான்
இடம் தேடுனாரு ,எல்லாம் புல்லா இருந்துது. கல்லறை
முழுக்க ஒரு ரவுண்டு வந்தாரு. ஒரு இடத்த செலக்ட்
பண்ணாரு ..அந்த இடத்துல எற்கனவே ஒரு டெட் பாடிய
பொதச்சு இருந்தாங்க. நம்மாளு கவலையே இல்லாம அந்த
எடத்த
தோண்ட ஆரம்பிச்சாரு. பல முறை தோண்டி இருப்பாங்க
போல மண்ணு சும்மா நெகு...நெகுன்னு ஈசியா வந்து விழுந்துச்சு ..
தோண்டி முடிச்சாரு ...உள்ள எட்டி பாத்தா ........எட்டி பாத்தா..............................................................
அரைகுறையா மக்கி போன ஒரு வயசானவரோட பிணம்.
ஒரு பெரிய சேலை துணில சுத்தி வெச்சிருந்தாங்க ..
நம்ம வெட்டியான் பர பரன்னு குழிக்குள்ள இறங்குனாரு ..
இன்னொரு சைடு அவரோட பையன் (13 வயசுதான் இருக்கும் )
இறங்குனான். ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் புடிச்சு
அப்படியே தூக்கி வெளிய போட்டாங்க. போட்டதும் அவரு
அந்த குழிய அடுத்த டெட்பாடிக்கு ரெடி பண்ண ஆரம்பிச்சாரு ..
அந்த பையனும் இன்னொரு பையனும் சேர்ந்து அந்த பாடிய
தூக்கி கொண்டு போய் கல்லறைலையே ஒரு ஓரமா
தூக்கி போட்டாங்க. அதுக்கு அப்புறம் என்னால அத பாக்க
முடியல ... கிளம்பும் போது அந்த பையன்கிட்ட தூக்கி போட்ட
டெட்பாடிய என்ன பண்ணுவிங்கன்னு கேட்டன். ரொம்ப கூலா
எரிச்சிடுவம்ன்னு சொன்னான் . எவ்வளவு சொத்து
வெச்சிருந்தாலும் கடைசில ஆறடி நிலம்தான்னு
சொல்லுவாங்க.. மக்களே இனி அது கூட கிடையாது ...
பாத்து சூதானமா இருந்துக்கங்க.

டிஸ்கி : இந்த கொடுமை பாத்துட்டு இருக்கும் போதே ரெண்டு
பேமிலி அவங்க அடக்கம் பண்ணுன இடத்துல அஞ்சலி
செலுத்திட்டு இருந்தாங்க ..பாவம் ... அவங்க அடக்கம் பண்ணுன
இடத்துல இப்ப யார் உறங்கிட்டு இருக்காங்களோ !

Saturday, October 10, 2009

ஏன் இப்படி மயக்கினாய் ?அண்ணன் வால்பையனுக்காக ஒரு கவிதை

Posted by மின்னல்ப்ரியன் at 10:15 PM 2 comments
உன்னை கடக்கும் போதெல்லாம்
கால்கள் தள்ளாடுகின்றன ,
மனசு உன்னை நினைத்து நினைத்தே
மறுஅடி எடுத்து வைக்காமல்
மறுத்து பேசுகிறது ,
சுரக்கும் ஹார்மோன்கள் உன்னை
நோக்கி சுண்டி இழுக்கிறது ,
நீ இல்லாமல் என் உலகம் ஒரு
சூன்யமாய் சுழல்கிறது ,
நீ என் இதயத்தில் நுழைந்து
கல்லீரலை கரைக்கிறாய்,
உன் பேரை உச்சரிக்கும் போதே
உள்ளுக்குள் நிகழும் மாற்றங்கள்
உலுக்கி எடுக்கிறது என்னை ,
சூரியனை சுற்றுகிறது பூமி
உன்னை சுற்றுகிறேன் நான் ,
உன்னை நினைக்கும் போதே
உலரும் உதடுகள் ஈரமாகின்றன,
நீ இல்லாத உலகம் நீர் இல்லாத தாவரம் ,
மனசு பட படக்க இதயம் தட தடக்க
நுழைகிறேன் உன்னில் பூச்சி பற பறக்க
வருகிறேன் என் கண்ணில் ,
என் அன்பு ஒயின்ஸாப்பே நீ
மட்டும் என்னை ஏன் இப்படி
மயக்கினாய் ?
ஏன் இப்படி
மயக்கினாய் ?

Wednesday, September 30, 2009

முத்திப்போன தேசபக்தி!

Posted by மின்னல்ப்ரியன் at 10:37 PM 0 comments
இந்தியன் டீம் செமி பைனலுக்கு போகணும் ...அதுக்காக இந்தியாவ
ஈயம் ....பித்தளை பேரீச்சம்பழத்துக்கு போட கூட நாம தயாராத்தான்
இருந்தோம்.பாகிஸ்தான் ஜெயிக்கனனுன்னு பழனி முருகனுக்கு
பால் காவடி பன்னீர் காவடி எடுக்காததுதான் பாக்கி.ரெண்டு நாளா
இந்த கணித மேதைகள் வேற இந்தியா ஜெயிக்க பாகிஸ்தான் பத்து
ரன்னுல ஜெயிக்கணும் . ஆஸ்தேரேலியா அஞ்சு விக்கெட்டுல
தோக்கனும் , அமெரிக்கால அணுகுண்டு போடணும் .. ஆப்ப்ரிகாவுல
வறுமைய ஒழிக்கனும்ன்னு பத்திரிக்கை டிவின்னு எல்லாத்துலயும்
கணக்கு மேல கணக்கா போட்டு சொல்லிட்டு இருந்தாங்க.

தெரியாமத்தான் கேக்கறன் ... அப்படி நாம செமி பைனலுக்கு என்னாத்த
கிழிக்க போறம்.உங்க தேசபக்திய நெனச்சா கை .. கால் எல்லாம் அரிக்குதய்யா!
முடியல ... நான் போய் சொரிஞ்சிக்கிரன். போறதுக்கு முன்னாடி பாகிஸ்தான்
ஜெயிச்சாவது இந்தியா செமி பைனல் போகனன்னு நினச்ச உங்க எல்லாருக்கும்
இந்தியன் டீம் சார்பா என் அன்பு பரிசுகள் கீழே.... எடுத்துக்குங்க.


ஏதோ என்னால முடிஞ்ச பரிசு ... திட்டாம கமெண்டும் ..வோட்டும்
போட்டுடுங்க..

Sunday, September 20, 2009

சூடான கிசு கிசுக்கள் ஏழு !

Posted by மின்னல்ப்ரியன் at 3:46 PM 2 comments


கிசு கிசு 1:
வேட்டையாடும் படம் முடிந்ததும் அரசியலுக்கு வருவார்
என்று சொல்லப்படும் ஹீரோ. இப்போது எல்லாம் சூட்டிங்
முடிந்தாலும் வீட்டுக்கு வருவது இல்லையாம் . "ஸ்கா"
நடிகையுடன் தினமும் ஒரே கும்மாளமாம். அப்பா என்ன
செய்வதென்று தெரியாமல் முழி பிதுங்கி போய் இருக்கிறாராம்.

கிசு கிசு 2:
எந்திரமான படம் முடிந்த பிறகு உச்ச நட்சத்திரத்தின் படத்தை
இயக்க பெரிய இயக்கனர்களுக்குள் பெரும் போட்டியே நடந்து
கொண்டு இருக்க சைலண்டாய் உச்சம் ஊர் பெயரில் படம் எடுக்கும்
அரசு இயக்குனருக்கு கால்சீட் கொடுத்து விட்டாராம். பட்டையை
கிளப்பும் பன்ச் டயலாகோடு ஸ்கிரிப்ட் தயாராகி வருகிறதாம். நம்ப
முடியாமல் புழுங்கி கொண்டு இருக்கிறது கோடம்பாக்கம் .

கிசு கிசு 3:
முருகனின் பெயர் முன்னணி காமெடி நடிகருக்கும் ,கந்தசாமி நாயகிக்கும்
இருக்கும் கனெக்சனை பார்த்து முன்னணி ஹீரோக்களே மூக்கின் மேல்
விரலை வைக்கிறார்களாம். எல்லாம் ஒரு பாட்டுக்கு ஆடியதால் வந்த
உறவு என காமெடியின் அடிபொடிகள் பப்ளிசிட்டி செய்கிறார்கள்.

கிசு கிசு 4:
மூணு ஸா நடிகை தெலுங்கு நடிகர் ஒருவரின் காதல் வலையில்
வசமாக சிக்கி உள்ளார் . அந்த நடிகரும் இவருக்காக ஆந்திராவில்
அழகான பங்களா கட்டி வருகிறாராம். நடிகை இனி தமிழில் நடிப்பது
சந்தேகம்தான்.

கிசு கிசு 5:
நடன நடிகரின் காதல் பார்வை இப்போது நயன நடிகையிடம் இருந்து
விலகி தமன நடிகையிடம் திரும்பி விட்டதாம். எல்லாம் ஒரு விழாவில்
முதல் பார்வையில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றம் என்கிறார்கள்.

கிசு கிசு 6:
தமிழ் சினிமாவின் பொக்கிசமான இயக்குனருக்கு இது போதாத காலம்
அவர் அடுத்து ஹீரோவாக நடிக்க இருந்த இரண்டு படங்களில் இருந்தும்
அவரை தூக்கி விட்டார்களாம்.

கிசு கிசு 7:
மின்னலான பெயரில் பதிவு எழுதும் அந்த வலை பதிவர் சூடான கிசு கிசு
என்ற தலைப்பில் எழுதிய டுபாக்கூர் கிசு கிசுக்களை உண்மை என நம்பி
விழுந்து விழுந்து படித்து கொண்டு இருக்கும் வலைப்பதிவர்களை
பார்த்து கோடம்பாக்கமே கை கொட்டி சிரிக்கிறதாம்.

பின் குறிப்பு:
ஏழாவது கிசு கிசுவை படித்தும் மேலே உள்ளது எல்லாமே பொய்
என்று புரியாதவர்கள் தயவு செய்து இனி கிசு கிசு படிப்பதை
நிறுத்தி கொள்ளவும் .மற்றபடி ஏமாந்த அனைத்து அன்பு
நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.எப்பூடி?

இது சும்மா ஜாலிக்காக மட்டுமே படிச்சிட்டு திட்டாம கமெண்டும் ,
வோட்டும் போட்டுடுங்க ..

Friday, September 18, 2009

தமிழ்படம் விளம்பரங்கள்

Posted by மின்னல்ப்ரியன் at 9:08 PM 1 comments

Friday, June 26, 2009

எனது ரீமிக்ஸ் வீடியோ 2

Posted by மின்னல்ப்ரியன் at 4:42 PM 1 comments
நானே எடிட் செய்த ரீமிக்ஸ் வீடியோ இது,
பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.





Monday, June 22, 2009

தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் ?

Posted by மின்னல்ப்ரியன் at 4:29 PM 12 comments
விஜய் கட்சி (மக்கள் இயக்கம் !) ஆரம்பித்துவிட்டார்..
அண்ணன் J.K.ரித்தீஸ் எம்.பி ஆகிவிட்டார் இப்படியே
போனால் தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் ?
சும்மா ஒரு கற்பனை.....

இயக்குனர் பேரரசு நாமக்கல் என்ற படத்தில் ஹீரோவாக
நடிக்கிறார். ஹீரோயின் இலியானா, படத்தில் பேரரசு
மொத்தம் 136 பஞ்ச் டயலாக் பேசபோகிறார்.

சிம்பு படமும் T.R படமும் ஒரே நேரத்தில் வெளி
வரகூடாது என தயாரிப்பாளர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.இரண்டு படங்களும் ஒரே நேரத்தில்
வருவதால் ரசிகர்களுக்குள் பெரும் மோதல் வெடிக்கிறது.
இதையும் மீறி இருவரின் படமும் தீபாவளியன்று ரிலீஸ்
ஆவதால் கட்டுக்கடங்காமல் கூடும் கூட்டத்தை
கட்டுபடுத்த ராணுவத்தை வரவழைக்க போவதாக
கமிசனர் தெரிவித்து உள்ளார்.

பா.மா.க நிறுவனர் ராமதாஸ் இனிமேல் தான் சாகும்
வரை ஜெயலிதாவோடோ,கருணாநிதியோடோ
கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் அப்படி மீறினால்
பொதுமக்கள் தன்னையும் தன் குடும்பத்தையும்
நடுரோட்டில் கட்டி வைத்து உருட்டு கட்டையால்
அடிக்கலாம் என்று சத்தியம் செய்துள்ளார். இவர்
சொன்னால் சொன்ன சொல்லை காப்பாத்துவார்
என்பதால் அரசியல் வட்டாரம் பெரும் பரபரப்பு
அடைந்துள்ளது.

நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க தி.மு.கவுடன் கூட்டணி
அமைத்து உள்ளது.இதை பற்றி கருத்து தெரிவித்த
கருணாநிதி அவர்கள் இரண்டு இதயங்கள்
துடித்தது.. மூக்கு புடைத்தது ,, கூட்டணி மலர்ந்தது
என்று வர்ணித்தார். மேலும் அவர் கூறுகையில்
விஜயகாந்தின் கல்யாண மண்டபத்தை தாங்கள்
இடிக்கவில்லை என்றும் அது பாலம் கட்டும் போது
அங்கு வேலை செய்த ஒருவர் குழி தோண்டும் போது
கடப்பாரை தெரியாமல் மண்டபத்தின் மேல்
பட்டதால் இடிந்து விழுந்து விட்டது என்றார். அரசே
சொந்த செலவில் அதை கட்டி தரும் என்றும் உறுதி அளித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்த கோஸ்டி மோதல்
முடிவுக்கு வந்தது.இனிமேல் நாங்கள் அனைவரும்
ஒற்றுமையாக செயல்படுவோம் என்று 1334 கோஸ்டி
தலைவர்களும் ஒன்றாய் நின்று பேட்டி கொடுத்தனர்.
மேலும் அவர்கள் அனைவரும் ஒன்றாய் சிரித்தபடியே
குரூப் போட்டோவுக்கு போசும் குடுத்தனர்.(இடி இடித்தது,
மின்னல் மின்னியது, மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது).

J.K.ரித்தீசை தான் ஒரு போதும் எனக்கு போட்டியாக
நினைக்கவில்லை என்று நடிகர் சாம் ஆண்டர்சன்
தெளிவுபட அறிவித்துள்ளார்.



இப்போதைக்கு இவ்வளவுதான் படிச்சிட்டு பிடிச்சிருந்தா
உங்க கமெண்டையும் ஓட்டையும் மறக்காம பதிவு
பண்ணுங்க.

Friday, June 19, 2009

என்ன எழுதறது?

Posted by மின்னல்ப்ரியன் at 12:19 PM 0 comments
எழுதுவதுக்கு எதுவுமே தோணாம போகும் போதுதான்
இந்த மாதிரி தலைப்பு எல்லாம் வைக்க தோணும் .
எதுவுமே
தோணலன்னா எழுதாம விட வேண்டியதுதானன்னு
நீங்க கேக்கலாம் . ஆனா என்ன நம்பி 8 followers இருக்காங்க.
அண்ணன் ஏதாவது எழுதுவாரு அத படிச்சு அறிவ
வளத்துக்கலான்னு
நம்பிக்கிட்டு இருக்கற அந்த விசிறிகள
ஏமாத்த விரும்பல... அதனால எல்லாரும்
நல்லா பாத்துக்குங்க நான் எழுத போறன்...நான் எழுத போறன்.

எப்படியோ 20-20 இருந்து நீங்க ஆடுனது போதும்
போய்
புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடான்னு ம்மள
துரத்தி அடிச்சிட்டாங்க.நம்மளும் இங்க ஒருத்தன் சிக்கி
இருக்கான்
வாடா மாப்பிளைன்னு தோனிய போட்டு
பொளந்து
கட்டிட்டு இருக்கோம். நம்ம டீம் ஏன் இப்படி
ஆய்டுச்சுன்னு நான் பயங்கரமா யோசிச்சதல ண்ண
கண்டுபிடிச்சன்
. எல்லாத்துக்கும் காரணம் இந்த IPLதான்.
IPL
விளையாடறப்ப ரோகித் சர்மாவ எப்படி அவுட்
பண்ணறதுன்னு
Flintoff -க்கு டோனி சொல்லி இருப்பாரு,
டோனிய எப்படி அவுட் பண்ணறதுன்னு மென்டிஸ்க்கு
கங்குலி
சொல்லி இருப்பாரு. இப்படி மாறி மாறி நம்ம டீம
பத்தின
எல்லா மேட்டரையும் நம்மாளுங்களே போட்டு
குடுத்திருப்பாங்க
..இப்ப அது நம்மளுக்கே ஆப்பு வெச்சிடுச்சு..
அதனால
நான் என் சொல்றன்னா IPL மேட்ச்
பாரின் players விளையாடகூடாது.(நீ பயங்கரமா யோசிச்சது
இததானவான்னு யாரும் யோசிக்காதிங்க. )

......................................................................................................................................

இன்னொரு முக்கியமான மேட்டர் என்னன்னா நான்
எழுதற பதிவ என்னால Tamilish ஈசியா இணைக்க முடியுது.
ஆனா தமிழ் மணத்துல இணைக்க முடியல.. font problemன்னு
Error msg வருது. நான் இதுவரைக்கும் டைப் பண்ணறது எல்லாமே
நம்ம bloggerதான். தங்கிலிஷ்ல டைப் பண்ணா
தமிழா மாறிடும். இத பத்தி யாரவது கொஞ்சம் விளக்கமா
கிளாஸ்எடுத்திங்கன்னா தூங்காம கேக்கறன். கொஞ்சம்
கருணை காட்டுங்க உங்க computer காலா காலத்துக்கும் வைரஸ்
தொல்ல இல்லாம நல்லா இருக்கும்.

Tuesday, June 2, 2009

எனது ரீமிக்ஸ் வீடியோ!

Posted by மின்னல்ப்ரியன் at 4:58 PM 2 comments
நானே எடிட் செய்த ரீமிக்ஸ் சாங் .. Youtube- ல்
ஒரு லட்சம் பார்வையாளர்களை தொடபோகிறது.
பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Sunday, May 10, 2009

இது உனக்காக மட்டும்!

Posted by மின்னல்ப்ரியன் at 2:07 PM 2 comments

ஒரு அலைபேசி அழைப்பில்
நீ பேசும் சில வார்த்தைகள்தான்
எனக்கான ஆக்சிஜன்.

என் எதிர்காலம் உன்னால்
தீர்மானிக்கபட்டுவிட்டது..
எனக்காக நீ கண்ட கனவுகளை
நனவாக்கி தருகிறேன் உனக்கான
பரிசாய்!

எனக்கு பைபிள் பகவத்கீதை
குர்ஆன் எல்லாமே நீ எழுதி
கொடுத்த ஆட்டோகிராப்
டைரிதான்.

Monday, April 20, 2009

விஷுவல் விருந்து!

Posted by மின்னல்ப்ரியன் at 7:30 PM 9 comments
நான் ரொம்ப ரசிச்ச படங்கள் .... பாத்து
என்ஜாய் பண்ணுங்க...இதுல ஒரு படத்த
நம்ம தமிழ் சினிமாகாரங்க சமீபத்துல
சுட்டுட்டாங்க...முடிஞ்சா கண்டுபுடுச்சு
கமெண்டா போடுங்க....( போட்டோவ "க்ளிக்"
பண்ணி பெருசா பாருங்க)













Saturday, April 11, 2009

எப்படி எல்லாம் யோசிக்கறாங்கய்யா!

Posted by மின்னல்ப்ரியன் at 12:03 PM 1 comments
இந்த விளம்பரத்த பாருங்க.. உங்க சிரிப்புக்கு
நான் கியாரண்டி ....

Saturday, April 4, 2009

மரியாதை -- ட்ரைலர் விமர்சனம்

Posted by மின்னல்ப்ரியன் at 3:02 PM 3 comments

2000 -ல் வானத்தை போல... 2009 -- ல் மரியாதை
என வானத்தை போல படத்தின் ஒரு காட்சியோடு
ட்ரைலர் துவங்கும் போதே 9 வருடங்களுக்கு பிறகு
மனதுக்குள் ஒரு இனம் புரியா பயம் பரவ தொடங்குகிறது.
டைட்டில் முடிந்ததும் அப்பா விஜயகாந்த் செவ்வானத்தின்
பின்னணியில் கம்பீரமாக நடந்து வரும் போது நமக்கு
அப்படியே ரிமோட்டை கீழே போட்டுவிட்டு எழுந்து
கும்பிட வேண்டும் போல் தோன்றுவது அந்த கேரக்டருக்கு
கிடைத்த வெற்றி.

இப்படி மெதுவாய் ஆரம்பிக்கும் ட்ரைலர் அடுத்தடுத்த
காட்சிகளில் பாசம்,அன்பு ,நேசம், சோகம்,காமெடி,
செண்டிமெண்ட்
,ஆக்சன்,டுயட் என எக்ஸ்பிரஸ் வேகம்
எடுக்கிறது
. "யார் வந்தது" பாடலில் கேப்டன் மீனாவுடன்
டான்ஸ் ஆடும்போது மீனா கேப்டனுக்கு அக்கா போல்
இருப்பது
கொஞ்சம் நெருடல். ஆனால் இந்த குறையை
அடுத்து
மீரா ஜாஸ்மினுடன் ஆடும் மூன்று டூயட் நிவர்த்தி
செய்கிறது
. சீனா, ஸ்பெயின் என பாரின் லொகேசன்களில்
இருவரும்
ஆடி பாடும் போது நமக்கு அப்படியே ஒரு இருபது
வயது
குறைந்து குழந்தை பருவத்துக்கே சென்றது போல்
ஒரு
பீலிங். நானெல்லாம் பீடிங் பாட்டில் வாங்கி
ஒரு வாரமாய் பால் குடித்து கொண்டு இருக்கிறேன் என்றால்
பாருங்களேன் . அதிலும் " இன்பமே " ரீமிக்ஸ் பாடலில்
இருவருக்கும் கெமிஸ்ட்ரி செமையாய் வொர்க் அவுட் ஆகிறது!.
வழக்கமாக ஹீரோ , ஹீரோயின்களுக்கு மட்டும் டூயட்
வைக்கும் தமிழ் சினிமாவில் தாத்தாவிற்கும், பேத்திக்கும்
3 டூயட் வைத்து டைரக்டர் புரட்சி செய்திருக்கிறார்.

அப்பா விஜயகாந்துக்கு ஜோடி அம்பிகா. நாலு பிரேம் வந்தாலும்
ரெண்டு பேரும் கொஞ்சம் கூட நடிக்கல. அப்படியே புருஷன்,
பொண்டாட்டியா வாழ்ந்திருக்காங்க. வயசான கெட்டப்
அம்பிகாவுக்கு நல்லா பொருந்துது. கேப்டனுக்குதான் பாவம்
மேக்கப்பயும் மீறி அவரு இளமை பளிச்சுன்னு வெளில தெரியுது.
மேக்கப்ல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் வசனம் ,
"வாய்க்கு ருசியா சமைக்கன்னுன்னா சமையக்காரி போதும்,
சம்சாரம் எதுக்குன்னு" அம்பிகாகிட்ட சொல்லும் போதும்
"மீன் பிடிக்கறவன் சில நேரம் தூங்கிகிட்டே வலைய வீசுவான்
அதுல முழிச்சுட்டு இருக்கற மீன் வந்து மாட்டிக்கும் அதுக்கு
பேர்தாம்பா விதின்னு" பையன் விஜயகாந்துக்கிட்ட சொல்லும்
போதும் வசனங்கள் அப்படியே நம்ம வாயிக்குள்ள கைய
விட்டு நெஞ்சுல எழுதுன மாதிரி மனசுல காப்பி ஆய்டுது. என்ன
ஒன்னு இந்த வசனங்கள் வர இடத்துல எல்லாம் வழக்கம்
லாலா ....லாலா ....லாலா ...லாலான்னு RR வந்து இருந்தா
இன்னும் நல்லா இருந்திருக்கும். என்ன ஆச்சு விக்ரமன் சார்
உங்களுக்கு? மறந்துட்டிங்களா?

ரமேஷ் கண்ணா, நாசர், தலைவாசல் விஜய், சம்பத் என நிறைய
நட்சத்திரங்கள் தலையை காட்டிவிட்டு செல்கிறார்கள். ரமேஷ்
கண்ணா காமெடி என்ற பெயரில் சில இடங்களில் கடுப்பேற்றுகிறார்.
கேப்டனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் , செண்டிமெண்ட், டூயட்
என படம் முழுக்க ஏகப்பட்ட காமெடியை வைத்து
கொண்டு தனியாக ரமேஷ் கண்ணா வேறு? ட்ரைலர் முழுதும்
பாத்தாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயம் இதில்
கேப்டன் டபுள் ஆக்சனா, ட்ரிபிள் ஆக்சனா என்பதுதான்.
மீனாவோடு டூயட் பாடும் கேப்டனும், மீரா ஜாஸ்மினோடு
டூயட் பாடும் கேப்டனும் ஒரு மாதிரி இருப்பதுதான் இந்த
குழப்பத்துக்கு காரணம். இருவரையும் பள்ளிக்கூட
மாணவர்கள் போல் காட்டியதுக்கு பதிலாய் ஒருவரை
கல்லூரி மாணவர் போல் காட்டி இருக்கலாம்.

இப்படி சில நிறை, குறைகள் இருந்தாலும் ட்ரைலர் முடியும்
போது ஒரு 1000 ரூபாய்க்கு டாப் அப் பண்ணி அண்ணன் ,
தம்பி, அக்கான்னு சொந்த பந்தத்துக்கெல்லாம் போன் போட்டு
பேசனும் போல ஒரு உணர்வை ஏற்படுத்தி நமக்கு தண்டசெலவு
வைப்பதில் இயக்குனர் வெற்றி கண்டு இருக்கிறார்.

பின் குறிப்பு: எங்கள் மீரா ஜாஸ்மின் ரசிகர் மன்றத்தின் சார்பில்
அவருக்கு எதிர் காலத்தில் இது போன்ற கொடுமையான
துன்பங்கள் நேரக்கூடாது என்று எல்லோரும் நாளை
10- ல் இருந்து 10.05 வரை ஒரு 5 நிமிடம்
பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.


கொஞ்சம் மொக்கதான் இருந்தாலும் பாத்து ஓட்டும்
கமெண்டும் போட்டுடுங்க.

Wednesday, April 1, 2009

முட்டாள்கள் தினம் உருவான கதை!

Posted by மின்னல்ப்ரியன் at 3:20 PM 2 comments

ஏப்ரல் ஒண்ணு வந்தாவே எல்லாரும் ஒருத்தர
ஒருத்தர் முட்டாள் ஆக்க பாக்கறோம். ஆனா
எதுக்காக இந்த தினம்?எப்படி இது உருவாச்சுன்னு
யாருக்காவது தெரியுமா? தெரியாமையே முட்டாள்தனமா
இத கொண்டாடரத விட்டுட்டு ப்ளாஷ்பேக்க முதல்ல
தெரிஞ்சுக்கங்க.

1764-ல ரோம் நாட்டோட ஒரு பகுதியா இருந்த கிரேக்க
நாட்ட ஆண்ட சான் ஆண்டனிங்கற மன்னன் ஒரு நாள்
அந்தபுரத்துல அழகிகளோட(நன்றி தினத்தந்தி ) "ஜல்சா"
பண்ணிட்டு இருக்கும்போது அத கெடுக்கறதுக்குன்னே
ஒரு அவசர நியூஸ் வந்துச்சு.. என்னடான்னு பாத்தா
அலெக்ஸ்சாண்டர் படையெடுத்து வாரதா நியூஸ்.
அந்த சமயம் அலெக்ஸ்சாண்டர் எல்லா போர்லயும்
ஜெயிச்சு ஒவ்வொரு நாடா தன்னோட சாம்ராஜியத்த
விரிவுபடுத்திட்டு இருந்தாரு. அப்படிப்பட்ட ஒரு
மாவீரன் படையெடுத்து வரான்னு தெரிஞ்சும் சான்
ஆண்டனி கொஞ்சம் கூட பயப்படவே இல்ல. அவனும்
போருக்கு தயாரானான். அவனோட முடிவு முட்டாள்தனமானது
அலெக்ஸ்சாண்டர ஜெயிக்க முடியாதுன்னு எல்லாரும்
சொல்லியும் அவன் தன் முடிவ மாத்திக்கவே இல்ல.

1764 மார்ச் மாசம் தொடங்குன போர் ஏப்ரல் ஒண்ணாம் தேதி
முடிவக்கு வந்துச்சு. சான் ஆண்டனியோட தம்மாதூண்டு
படைய அடிச்சு துவம்சம் பண்ணுனதும் இல்லாம சான்
ஆண்டனிய போர் கைதியாக்குனாரு அலெக்ஸ்சாண்டர்.
குதிரைகளும், வீரர்களும் ரத்த வெள்ளத்துல செத்து கிடந்த
அந்த போர்க்களத்துல சான் ஆண்டனி அலெக்ஸ்சாண்டர
பாத்து சொன்னான்" நீங்க மாவீரரா இருக்கலாம், உலகத்தயே
ஆட்சி செய்யலாம். ஆனா நீங்க ஒரு முட்டாள்ன்னு " உடனே அலெக்ஸ்சாண்டர் கோபத்துல கத்திய உருவிட்டு ஏன்
அப்படி சொன்னன்னு கேட்டாரு. அதுக்கு சான் ஆண்டனி
சொன்னான் இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு முட்டாள்கள்
தினம் நீ என்ன ஜெயிச்சட்டன்னு ஊருக்குள்ள போய்
சொன்னா உன்ன எல்லாரும் முட்டாள்ன்னு
சொல்லுவாங்கன்னு ....அதுக்கு அப்புறம் ....அட இன்னுமா நீங்க
இந்த கதைய உண்மைன்னு நினச்சு படிச்சுட்டு இருக்கீங்க?
அட மக்கா .....இப்படி முட்டாள் ஆயிட்டிங்களே....அய்யோ...அய்யோ .

பின் குறிப்பு: முட்டாள்கள் தினத்துக்கான உண்மையான
கதை தெரிஞ்சவங்க அப்படியே கமெண்டா
போட்டுடுங்க. நானும் தெரிஞ்சக்கவன்ல....


புடிச்சு இருந்தா ஓட்டையும், கமெண்டையும் மறக்காம
போட்டுடுங்க.

Monday, March 30, 2009

" இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" உண்மை என்னன்னா?

Posted by மின்னல்ப்ரியன் at 4:13 PM 2 comments
முதல்ல இந்த பதிவோட ட்ரைலர்--- குங்குமம் இந்த
வாரம் சன் டிவிக்கு போட்டி கிங் டிவியா? மறுக்கிறார்
மாறன். கிங் டிவிக்கு போட்டி கிங் டிவி 2 தான் மார்
தட்டுகிறார் NKKP.ராஜா. இந்த இதழுடன்
இலவச கலர் டிவி மற்றும் இரண்டு ரூபாய் அரிசி.


இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"
அப்படின்னு சன் டிவியில ( இப்ப கலைஞர் டிவிலயும்)
போடற படம் எல்லாம் உண்மையிலேயே இந்திய
தொலைக்காட்சிகளில்
முதல் முறையாகத்தான் போடறாங்கன்னு
நீங்க நினச்சா நீங்க இன்னும் வளரனும் தம்பி .(உங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தருவாரு).

உண்மை என்னன்னா நீங்க பாக்கறது முதல் முறை இல்ல.
ஒரு 20, 25வது முறைதான் நீங்க பாக்கிறிங்க. தொலைக்காட்சி
வரலாற்றுல முதல் முறையா எங்க ஊரு கிங் டிவில முதல்ல
பாக்கறது நாங்கதான். ( கிங் டிவி மற்றும் கிங் டிவி 2 ஈரோடு MLA
முன்னாள் அமைச்சர் NKKP. ராஜாவால் நடத்தப்படுகிறது.)
நாங்க கிங் டிவில பாத்து சலிச்ச படங்களைத்தான் நீங்க
சன் டிவில முதல் முறையா பாக்கிறிங்க. என்ன பண்ணறது
உங்க கொடுப்பின அவ்வளவுதான். இதுக்குதான் ஈரோடு
மாவட்டத்துல பொறக்கனும். விடுங்க இப்ப பீல் பண்ணி
என்ன பிரயோஜனம்.

கலைஞர் இலவசமா டிவி குடுத்துட்டாரு ஓகே. படம் யாரு
போடறதுன்னு தொகுதி மக்கள் யாரும் கேட்டுடகூடாதுனு
ரெண்டு டிவி சேனல் ஆரம்பிச்சு புது புது படமா காட்ற எங்க
MLA வோட நல்ல மனசு உங்க யாருக்காவது வருமாய்யா?
பாவம் படத்துக்கு இடையில கொஞ்சமா விளம்பரம் போட்டு
கொஞ்சமா சம்பாதிக்கற அவர போய் ஆள கடத்துனாருன்னு
சொல்லி இருந்த அமைச்சர் பதவியும் புடிங்கிட்டிங்க. அப்படி
இருந்தும் அவரு எங்களுக்காக ரைட்ஸ் பத்தி எல்லாம்
கவலபடாம இன்னிக்கு ரிலீஸ் ஆகற படத்த இன்னிக்கே
போட்டு காட்டறாரு. அடுத்த எலக்சன்லயும் அவரையே
MLA ஆக்கி எந்திரன்ல இருந்து மருதநாயகம் வரைக்கும்
ரிலீஸ்க்கு முன்னாடியே பாக்கல நாங்க ஈரோட்டுக்காரங்க
இல்ல!

பின் குறிப்பு :
கொஞ்ச நாள் முன்னால் ஜுனியர் விகடனில் இதை
பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. நிருபர் கேட்ட
கேள்விக்கு இது தன் கவனத்துக்கு வரவில்லை
என்றும் இனி இது போல் நடக்காது என்றும் ராஜா
பதில் சொல்லி
இருந்தார். போன வாரம் நான் ஊருக்கு
போயிருந்தப்ப கிங் டிவில சந்தோஷ் சுப்பிரமணியம்
ஓடிட்டு இருந்துது. கீழ ஓடற விளம்பரத்த பாத்தா செம
அதிர்ச்சி... ஜுனியர் விகடன் விளம்பரம் ஓடிட்டு
இருந்துது. என்ன பண்ணறது பாத்துட்டு சிரிக்க
வேண்டியதுதான்.


படித்துவிட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும்,
ஓட்டையும் தவறாமல் பதிவு செய்யவும்.

Friday, March 27, 2009

பாராளுமன்ற தேர்தலும் பட்டய கிளப்பும் சலுகைகளும் .

Posted by மின்னல்ப்ரியன் at 2:17 PM 4 comments
முக்கிய அறிவிப்பு :
இங்கு குறிப்பிடபட்டிருக்கும் ஆலோசனைகளை
கலைஞர், அம்மா, வைகோ, திருமா, சோனியா, அத்வானி
என யார் வேண்டுமானாலும் எந்த கட்சி வேண்டுமானாலும்
பயன்படுத்தி கொள்ளலாம்.கட்டணம் எதுவும் கிடையாது.
மேலும் idea- சொன்னா திருடிடுவாங்க என்று சொல்லும்
விஜயகாந்த் போன்றோரின் சுயநல போக்கும் எனக்கு
கிடையாது என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்.

இனி ஆலோசனைகள் :

1. நீங்க நோட்டு குடுக்க போகும் போது ஸாரி... ஸாரி ..
நீங்க ஓட்டு கேட்க போகும் போது சும்மா போயி எங்க ஆட்சியின் சாதனைகளை பாருங்கள்ன்னு எல்லாம் மொக்க போடறத
விட்டுட்டு " நீங்க எங்களுக்கு ஓட்டு போட்டா ஓட்டு போடற
உங்க எல்லாரு பேரையும் குலுக்கி போட்டு நாலு பேருக்கு
மாநில அமைச்சர் போஸ்டும், பம்பர் பரிசா ஒருத்தருக்கு
மத்திய அமைச்சர் போஸ்டும் தருவோம்னு ஒரு பிட்ட
போடுங்க " அப்புறம் பாருங்க அந்த முட்டாள் ஜனங்க
பூரா பேராசைல ஓட்ட உங்களுக்கு போட்டுடுங்க.

2. ரெண்டு ஏக்கர் நிலமல்லாம் இப்ப வொர்க் அவுட் ஆகாது.
என்ன பண்ணுங்க ஓட்டு கேட்க போகும் போதே எல்லார்
கைலயும் ரெண்டு ரெண்டு பட்டாவ குடுத்து " அய்யா
உங்களுக்கு நிலாவுல 500 ஏக்கரும் , செவ்வாயில 1000
ஏக்கரும் ஒதுக்கி இருக்கோம், நீங்க நாளைக்கே கூட போயி
விவசாயம் பண்ணலாம்னு ஒரு மேட்டர போடுங்க. பய
புள்ளைக முடிஞ்சா போயி விவசாயம் பாத்து பொழச்சு
போறானுங்க.

3. 18 வயசுக்கு மேலஇருக்கற கல்லூரி மாணவர்கள்
யாருக்கும் எக்ஸாம் கிடையாது , பாஸ், பெயில் எதுவும்
கிடையாது, வருசத்துக்கு ரெண்டு நாள் காலேஜ் போனா
போதும். மீதி நாள் நீங்க பொழுதைபோக்க அரசே இலவச
சினிமா பாஸ் குடுக்கும். அது மட்டும் இல்லாம நீங்க படிச்சு
முடிச்ச உடனே ஒபாமாகிட்ட சொல்லி உங்களுக்கு எல்லாம்
அமெரிக்காவுல வேல வாங்கி தருவோம்ன்னு சொல்லி
பாருங்க மாணவர் ஓட்டு எல்லாம் உங்களுக்குத்தான்.

4. இப்ப குடுத்து இருக்கற சின்ன டிவிய எக்சேஞ்ல
எடுத்துக்கிட்டு புதுசா LCD Tv யும் கூடவே சன் டைரக்ட்
DTH சேர்த்து குடுக்கலாம். அது மட்டுமில்லாம பெண்
வாக்காளர்கள கவர சீரியலுக்கின்னே ஒரு 24 மணி
நேர தனி சேனல் ஆரம்பிக்கலாம் .

5. நாங்க ஆட்சிக்கு வந்தா அப்பப்ப எங்க ஆளுங்கள
ராஜினாமா பண்ண வெச்சு அடிக்கடி இடைத்தேர்தல்
நடத்தி அண்டா, குண்டா , அரிசி, பருப்பு செல்போன்
உட்பட உங்கள் இல்லத்துக்கு தேவையான அனைத்து
பொருட்களையும் இனாமா தருவோம்னு ஒரு
வாக்குறுதி குடுங்க போதும்.

6. மூத்த குடிமக்களுக்கு டாஸ்மாக் சரக்கில் 70%
தள்ளுபடி, பெண்களுக்கு ஜவுளி கடைகளில் 33%
சிறப்பு சலுகை. புதுசா கல்யாணம் செய்யறவங்களுக்கு
ஊட்டி அல்லது கொடைக்கானலில் இலவச தேனிலவு.
காதலர்களுக்கு மாதம் 1000 ரூபாய்க்கு இலவச டாப் அப்
போன்ற சின்ன சின்ன சலுகைகளையும் அறிவிக்கலாம்.

7. இறுதியாய் விவசாயிகள் மட்டுமின்றி நாட்டில் உள்ள
அத்தனை பேரும் வங்கியில், மார்வாடி கடையில், பக்கத்து
வீட்டுக்காரரிடம், பண்ணையாரிடம் என எங்கு கடன் வாங்கி
இருந்தாலும், எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் அத்தனையும்
தள்ளுபடி என்று அறிவிப்பதோடு போனஸாக பெண்கள்
பக்கத்து வீட்டில் அவசரத்துக்கு வாங்கிய காபி பொடிக்கும்
சேர்த்து தள்ளுபடி அறிவியுங்கள். அத்தனை ஓட்டும்
உங்களுக்கே ....நாளை நமதே...நாநூற்று முப்பத்தி நாலும் நமதே.


சலுகைகள் தொடரும் ......

பின்குறிப்பு : படித்து விட்டு tamilish-ல் ஓட்டு போடுபவர்களுக்கும்
விரைவில் சலுகைகள் அறிவிக்கலாம் என்று இருக்கிறேன்.


படித்து விட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும்
தவறாமல் பதிவு செய்யவும்.

Wednesday, March 25, 2009

நைட் ஓட்டல்களும் ..நடக்கும் அநியாயங்களும்

Posted by மின்னல்ப்ரியன் at 11:07 AM 9 comments

தலைப்ப பாத்ததும் பார்ட்டி, பப், குடி, கூத்துன்னு நம்ம
சென்னை நைட் ஓட்டல்கள் பத்தின பதிவுன்னு நீங்க
நினச்சடாதிங்க... அது வேற ஓட்டல்..இது வேற ஓட்டல்!
சென்னைல இருந்து கோவை, திருச்சி, மதுரைன்னு பஸ்ல
வெளியூர் போகும் போதோ, வரும் போதோ டிரைவர் ஒரு
இடத்துல வண்டிய நிறுத்திட்டு " பஸ் ஒரு பத்து நிமிஷம்
நிக்கும்
, டீ, காபி,டிபன் சாப்பிடறவங்க ... பாத்ரூம்
போறவங்க
எல்லாம் போயிட்டு வந்துடுங்கன்னு...
சவுண்ட்
குடுப்பார் பாத்திங்களா அந்த ஓட்டலுங்க
பத்தின மேட்டர்தான் இது.

சுத்தம் சோறு போடுங்கறது எல்லாம் சும்மா.. உட்டாலக்கிடி,
இந்த மாதிரி ஓட்டல் ஓனருகிட்ட கேட்டா அசுத்தம் சோறு,
பிரியாணி
, சிக்கன் 65 எல்லாம் போடும்னு புதுசா பழமொழி
சொல்லுவாங்க. கையேந்தி பவன்தான் மோசமான நோய்
பரப்பும் ஒட்டல்ன்னு சொல்றவங்க ஒரே ஒரு தடவ இங்க
வந்து சாப்பிடுங்க ,அதுக்கப்பறம் நீங்க உங்க பரம்பரைக்கே
நோய் பரப்ப ஆரம்பிச்சுடுவிங்க.. அவ்வளவு கேவலமான
உணவுகள், வாயிலேயே வெக்க முடியாத டேஸ்ட்,
கன்னாபின்னான்னு ரேட்டு, ஏதாவது கேள்வி கேட்டா
இஷ்டம்னா சாப்பிடு ,இல்ல எடத்த காலி பண்ணுங்கர
அவங்க தெனாவெட்டு எல்லாம் பாக்கும் போது நம்ம
பஸ் டிரைவரையும், கண்டக்டரையும் தர்ம அடி அடிக்கணும்
போல கோபம் வரும். பின்ன என்ன அவங்களுக்கு கிடைக்கற
ஓசி
டீ, சிகரெட்க்குக்காக நம்ம அனுபவிக்கற கஷ்டம் நம்ம
எதிரிக்கு கூட வர கூடாது.

இதுகூட பரவாயில்ல.. இன்னொரு அநியாயம் இருக்கே
இன்னும் கொடுமை. யூரின் போக ஒரு ஆளுக்கு அஞ்சு
ரூபா, அஞ்சு ரூபா கொடுத்துட்டு என்ன அமெரிக்காவுக்கா
போகமுடியும். அரையுங் குறையுமா தென்னங்கீத்து வெச்சு
அவனுங்க கட்டி இருக்கற toilet தான் போகமுடியும்.
( இதுக்குதான் பஸ் ஏறும் போது பீர் குடிக்க கூடாதுன்னு
பெரியவங்க
சொல்லி இருக்காங்க)அத toiletன்னு சொன்னா
toiletஅ நாம என்னான்னு சொல்றது அப்படின்னு யாராவது
கேள்வி கேட்க நெனச்சிங்கன்னா அந்த கேள்விய அப்படியே
குமுதம் அரசு பதில்கள் பகுதிக்கு அனுபிச்சிடுங்க. நாம
மேட்டருக்கு வருவோம், நான் எதுக்கு அஞ்சு ரூபா
குடுக்கணும் அதான் சுத்தி பொட்டல் காடா இருக்கே
நான் அங்க போய்க்கறன்னு யாராவது அந்த பக்கம்
போலான்னு நினைச்சா அங்க நாலு குண்டர்கள்
கைல லத்தி மாதிரி ஒரு குச்சிய வெச்சுட்டு நிப்பாங்க.
நீங்க அந்த பக்கம் போனாலே அசிங்க அசிங்கமா
பேசுவானுங்க, அதையும் மீறி நான் இங்கதான் யூரின்
போவன்னு நீங்க குழந்தை மாதிரி அடம் புடிச்சா நீங்க
அடி வாங்கறதா எந்த ஹீரோவாலயும் தடுக்க
முடியாது. ஆம்பளைங்க நிலைமையே இப்படின்னா..
பஸ்ல ட்ராவல் பண்ற லேடீஸ் நிலம இன்னும் கொடுமை.
தவிர்க்கவே முடியாத இயற்கை உபாதைக்காக இவங்க
இந்த toilet யூஸ் பண்ணும் போது அங்க காசு வாங்க
உட்கார்ந்து இருப்பவனே பெண்களை அசிங்கமாய்
பேசுவதும், திட்டுவதும் என இவர்கள் பண்ணும்
அராஜகத்தையும் , மாமூல் வாங்கி கொண்டு இந்த
மாதிரி ஓட்டல்களை கண்டும் காணாமலும் இருக்கும்
அதிகாரிகளையும், இங்கு பஸ் நிறுத்துவது
தெரிந்தும், இங்கு நடக்கும் அநியாயங்கள் தெரிந்தும்
கண்டு கொள்ளாமல் இருக்கும் அரசு மற்றும் தனியார்
பஸ் நிறுவனதாறையும் கண்டித்து எல்லோரும் ஒரு
நிமிடம் அவர்களை நினைத்து கெட்ட வார்த்தைகளில்
அசிங்க அசிங்கமாய் திட்டுங்கள்.

திட்டி முடித்த பாதிக்கபட்ட அத்தனை பேரும் இந்த
பிரச்சனையை புகாராய் தனியார் மற்றும் அரசு பஸ்
நிறுவனங்களுக்கு போனில் சொல்லுங்கள். ஏதாவது
மாற்றம் நடக்கிறதா என்று பார்ப்போம்.

பின் குறிப்பு: இந்த ஓட்டல்களில் எனக்கு புரியாத ஒரு
விஷயம் எல்லா ஓட்டல்களிலும் ஒரு ஆடியோ கேசட்
கடை இருக்கும். அதில் எதாவது ஒரு இரட்டை அர்த்த
கானா பாடல் எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கும்.
காலம் மாறிவிட்டது இப்போது கேசட்டுக்கு பதிலாய் சிடி
விக்கிறார்கள். மற்றபடி அந்த செட்அப் இன்னும்
அப்படியேதான் இருக்கிறது.முன்னாடியாவது பஸ்
டிரைவர்கள் அங்கு விக்கும் கேசட்டை வாங்குவதை
அவ்வப்போது பார்த்துருக்கிறேன்.இப்போது எல்லா
வண்டியும் video coach ஆன பிறகு அங்கு யார் கேசட்
வாங்குகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.


படித்து விட்டு பிடித்திருந்தால் உங்கள் கருத்தையும் ஓட்டையும் தவறாமல் பதிவு செய்யுங்கள்.

Friday, March 20, 2009

மெரீனா நேற்று நடந்ததும் Zee தமிழ் தொலைக்காட்சியும் ....

Posted by மின்னல்ப்ரியன் at 5:13 PM 6 comments

முதல்ல மெரீனா மேட்டரு... பகல்லயே மெரினால
நடக்கற கூத்து தாங்கமுடியாது .. கொளுத்தற
கட்டுமரத்துக்கு பின்னாடி ஒரு 100, 200 ஜோடி
உட்கார்ந்து இருக்கும், அங்க இடம்
குடைய விரிச்சு உட்கார்ந்து இருப்பாங்க.
இப்படி மறைவான இடத்துல ஒருத்தர ஒருத்தர்
மனச தொறந்து(!) காதல் பண்றத பார்க்கறதுக்கின்னே
ஒரு 50 பேர் வேல வெட்டிய உட்டுட்டு வந்து
அங்க சுத்துவானுங்க... பகல்லயே இப்படின்னா
நைட்ல கேக்கவா வேணும்... நேத்து ஒரு 7 மணிக்கு
மேல பீச்சுக்கு நான் மட்டும் தனியா போயிருந்தன்.
பைக்க பார்க் பண்ணிட்டு நீச்சல் குளத்துக்கு பின்னாடி
கொஞ்ச தூரம் மணல்ல நடந்து ஒரு இடத்துல உட்கார்ந்து
ஒரு 10 நிமிஷம் ஆயிருக்கும்..
"உட்காரவா " என்று குரல் திரும்பி பார்த்தா
சேலையும், புல் மேக்கப்புமா கையில hand bag
வெச்சுக்கிட்டு ஒரு அரவாணி நின்னுட்டு இருந்தாங்க..
நான் திரும்பி பார்த்ததும் "50 ரூபாதான்"
என்றார். நான் மறுத்து தலையசைத்தவாறே
"வேணாம் கிளம்பு" என்றதும் அவர் என்னை விட்டு
நகர்ந்து தனியாய் உட்கார்ந்திருந்த
ஒருவரிடம் போய் நின்றார். அவரும் வேணாம்னு
சொல்லி இருப்பார் போல சுற்றிலும் தேடிக்
தனியாய் உட்கார்ந்திருந்த இன்னொருவரிடம் போனார்.
அவர் அவர் அருகில் உட்கார்ந்துவிட்டு 5 நிமிடம் கழித்து
எழுந்து போனார் (or)போனாள்.

இது போன்ற அனுபவம் தனியாய் போன சில
சமயம் முன்னரே எனக்கு வாய்த்திருந்தது.
உங்களில் பலருக்கு கூட இந்த அனுபவம்
நேர்ந்திருக்கலாம். இதே மெரீனாவில் சில
மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு ஒரு
இளைனனும், அரவாணியும் மறைவான இடத்தில்
கூட பண்ண தயங்கும் விஷயத்தை பண்ணிக் கொண்டு
இருக்க அதையும் ஒரு 50 பேர் சுற்றி நின்று வேடிக்கை
பார்த்து கொண்டு இருந்ததுதான் உச்சகட்ட கொடுமை.

குழந்தைகள், பெண்கள் , சுற்றுலா வருபவர்கள்
என ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர்
செல்லும் மெரீனா திறந்தவெளி விபச்சார
விடுதியாய் மாறுவது கலாச்சார காவலர்கள்
எவன் கண்ணிலும் படவில்லையா?





அடுத்து Zee தமிழ் .... இந்த சேனல் லான்ச் ஆனப்ப
என் பிரண்ட்ஸ் நிறைய பேரு apply பண்ணாங்க..
என்ன கூட apply பண்ண சொல்லி சொன்னானுங்க..
மச்சான் நீ வேணுன்னா பாரு விஜய் டிவிக்கு
சரியான போட்டியா இவங்கதான் இருக்க போறாங்கன்னு
ஓவரா பில்டப் எல்லாம் வேற குடுத்தானுங்க.. சரி அந்த
அளவுக்கு இல்லன்னாலும் ராஜ் டிவி, கலைஞர் டிவிய விட
பெட்டரா இருப்பாங்கன்னு நானும் நெனச்சன். அப்படி நான்
நெனச்சதுக்கு என்ன நானே ___ , ________ , ___________
_____ , ___________ அடிச்சுக்கணும். ( கோடிட்ட இடத்த
நீங்களே நிரப்பிக்கங்க !).

இந்த சேனல்ல போடற சினிமாவ எல்லாம் யாராவது
பாத்து இருக்கிங்களா? அந்த கொடுப்பின எனக்கு
கிடைச்சது. அப்படி நான் போன வாரம் பாத்த சில
உலக காவியங்கள் "ஆச வெச்சேன் , துள்ளுற வயசு,
சுட்ட பழம், பத்து பத்து" . இப்படி எல்லாம் தமிழ்ல
படம் இருக்கான்னு யோசிக்காதிங்க.. இந்த காவியங்கள்
எல்லாம் விஜய், ரஜினி மாதிரி மசாலா நாயகன்கள்
நடிச்ச படமா இருந்தா உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்.
இந்த உலக சினிமா எல்லாம் சைதை ராஜ் ,
அமிஞ்சக்கரை லட்சுமி மாதிரி தியேட்டர்ல
காலை காட்சியா ஒரு நாள், ரெண்டு நாள் ஓடுன
படங்கள். மக்கள் பார்வைக்கே வராம போன
இந்த காவியங்கள காசுகொடுத்து ரைட்ஸ் வாங்கி
போடற Zee தமிழுக்கு சிட்டு குருவி லேகிய
விளம்பரமாவது யாராவது கொடுத்தால் அவர்களும்
பிழைப்பார்கள், நாமும் இந்த மாதிரி உலக சினிமாக்களை
தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த மாதிரி சினிமாக்களை போட்டு பேரை கெடுத்து
கொள்வதற்க்கு பதில் அந்த ஸ்லாட்டை பேசாமல்
சித்த வைத்தியர், நியூமராலாஜிஸ்ட்
போன்றவர்களுக்கு கொடுத்தால் அவர்கள்
ஆவது ஏதாவது சுமாரான பிகருடன் உடகார்ந்து
ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அதை
பார்த்து ஒரு பத்து பேர் அந்தரங்க
வைத்தியம் பார்ப்பார்கள், ஒரு இருபது பேர்
பேரையாவது மாற்றுவார்கள். சேனலுக்கும் ஏதாவது
வருமானம் கிடைக்கும். பாக்கலாம் என்ன நடக்குதுன்னு!

பின் குறிப்பு : மேலே சொன்ன உலக சினிமாவில்
"ஆச வெச்சேன் " படத்தில் ஹீரோவின் விக்கலை
நிறுத்துவதுக்கு ஹீரோயின் யூஸ்
பண்ணும் டெக்னிக்கை பாத்த அதிர்சசியில்
இனி எனக்கு ஜென்மத்துக்கும் விக்கல் வராது
என்று நினைக்கிறேன். (அந்த டெக்னிக்கை இங்க
சொல்லமுடியாது , ம்ம்ம் .. உங்க கொடுப்பின அவ்வளவுதான்).

இந்த பதிவு புடிச்சிருந்தா உங்கள் பொன்னான
வாக்குகளை தமிழிஸ் போட்டுடுங்க.