Saturday, October 27, 2007

Posted by மின்னல்ப்ரியன் at 11:17 AM 1 comments

அனிதாவின் கணவனாகிய என்னையும்

ரவியின் மனைவியாகிய உன்னையும்

தவிர்த்து சில உடைந்த வளையல்கள்

புத்தக மடிப்பில் புதைந்த ரோஜா இதழ்

ஒரு சாக்லெட் காகிதம் ஒற்றை ஹேர்பின்

மற்றும் சிலவாய் எஞ்சி நிற்கிறது நம் காதல்.

Friday, October 26, 2007

Posted by மின்னல்ப்ரியன் at 5:45 PM 0 comments



மலர்களே...



தாத்தாவின் சவ ஊர்வலத்தில்
அழுதேன் கூட்டத்தில் மிதிபடும்
ரோஜாக்களை நினைத்து,,,,
Posted by மின்னல்ப்ரியன் at 5:27 PM 0 comments
காதல்

உனக்காக நான் வாங்கும்
ஒற்றை ரோஜாவை
தேர்ந்தெடுக்கஆகும்
காலதாமதத்தை பற்றி
கவலைப்படும் பூக்காரனுக்கு
தெரியுமா நம் காதலைப் பற்றி?