Monday, April 20, 2009

விஷுவல் விருந்து!

Posted by மின்னல்ப்ரியன் at 7:30 PM 9 comments
நான் ரொம்ப ரசிச்ச படங்கள் .... பாத்து
என்ஜாய் பண்ணுங்க...இதுல ஒரு படத்த
நம்ம தமிழ் சினிமாகாரங்க சமீபத்துல
சுட்டுட்டாங்க...முடிஞ்சா கண்டுபுடுச்சு
கமெண்டா போடுங்க....( போட்டோவ "க்ளிக்"
பண்ணி பெருசா பாருங்க)













Saturday, April 11, 2009

எப்படி எல்லாம் யோசிக்கறாங்கய்யா!

Posted by மின்னல்ப்ரியன் at 12:03 PM 1 comments
இந்த விளம்பரத்த பாருங்க.. உங்க சிரிப்புக்கு
நான் கியாரண்டி ....

Saturday, April 4, 2009

மரியாதை -- ட்ரைலர் விமர்சனம்

Posted by மின்னல்ப்ரியன் at 3:02 PM 3 comments

2000 -ல் வானத்தை போல... 2009 -- ல் மரியாதை
என வானத்தை போல படத்தின் ஒரு காட்சியோடு
ட்ரைலர் துவங்கும் போதே 9 வருடங்களுக்கு பிறகு
மனதுக்குள் ஒரு இனம் புரியா பயம் பரவ தொடங்குகிறது.
டைட்டில் முடிந்ததும் அப்பா விஜயகாந்த் செவ்வானத்தின்
பின்னணியில் கம்பீரமாக நடந்து வரும் போது நமக்கு
அப்படியே ரிமோட்டை கீழே போட்டுவிட்டு எழுந்து
கும்பிட வேண்டும் போல் தோன்றுவது அந்த கேரக்டருக்கு
கிடைத்த வெற்றி.

இப்படி மெதுவாய் ஆரம்பிக்கும் ட்ரைலர் அடுத்தடுத்த
காட்சிகளில் பாசம்,அன்பு ,நேசம், சோகம்,காமெடி,
செண்டிமெண்ட்
,ஆக்சன்,டுயட் என எக்ஸ்பிரஸ் வேகம்
எடுக்கிறது
. "யார் வந்தது" பாடலில் கேப்டன் மீனாவுடன்
டான்ஸ் ஆடும்போது மீனா கேப்டனுக்கு அக்கா போல்
இருப்பது
கொஞ்சம் நெருடல். ஆனால் இந்த குறையை
அடுத்து
மீரா ஜாஸ்மினுடன் ஆடும் மூன்று டூயட் நிவர்த்தி
செய்கிறது
. சீனா, ஸ்பெயின் என பாரின் லொகேசன்களில்
இருவரும்
ஆடி பாடும் போது நமக்கு அப்படியே ஒரு இருபது
வயது
குறைந்து குழந்தை பருவத்துக்கே சென்றது போல்
ஒரு
பீலிங். நானெல்லாம் பீடிங் பாட்டில் வாங்கி
ஒரு வாரமாய் பால் குடித்து கொண்டு இருக்கிறேன் என்றால்
பாருங்களேன் . அதிலும் " இன்பமே " ரீமிக்ஸ் பாடலில்
இருவருக்கும் கெமிஸ்ட்ரி செமையாய் வொர்க் அவுட் ஆகிறது!.
வழக்கமாக ஹீரோ , ஹீரோயின்களுக்கு மட்டும் டூயட்
வைக்கும் தமிழ் சினிமாவில் தாத்தாவிற்கும், பேத்திக்கும்
3 டூயட் வைத்து டைரக்டர் புரட்சி செய்திருக்கிறார்.

அப்பா விஜயகாந்துக்கு ஜோடி அம்பிகா. நாலு பிரேம் வந்தாலும்
ரெண்டு பேரும் கொஞ்சம் கூட நடிக்கல. அப்படியே புருஷன்,
பொண்டாட்டியா வாழ்ந்திருக்காங்க. வயசான கெட்டப்
அம்பிகாவுக்கு நல்லா பொருந்துது. கேப்டனுக்குதான் பாவம்
மேக்கப்பயும் மீறி அவரு இளமை பளிச்சுன்னு வெளில தெரியுது.
மேக்கப்ல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் வசனம் ,
"வாய்க்கு ருசியா சமைக்கன்னுன்னா சமையக்காரி போதும்,
சம்சாரம் எதுக்குன்னு" அம்பிகாகிட்ட சொல்லும் போதும்
"மீன் பிடிக்கறவன் சில நேரம் தூங்கிகிட்டே வலைய வீசுவான்
அதுல முழிச்சுட்டு இருக்கற மீன் வந்து மாட்டிக்கும் அதுக்கு
பேர்தாம்பா விதின்னு" பையன் விஜயகாந்துக்கிட்ட சொல்லும்
போதும் வசனங்கள் அப்படியே நம்ம வாயிக்குள்ள கைய
விட்டு நெஞ்சுல எழுதுன மாதிரி மனசுல காப்பி ஆய்டுது. என்ன
ஒன்னு இந்த வசனங்கள் வர இடத்துல எல்லாம் வழக்கம்
லாலா ....லாலா ....லாலா ...லாலான்னு RR வந்து இருந்தா
இன்னும் நல்லா இருந்திருக்கும். என்ன ஆச்சு விக்ரமன் சார்
உங்களுக்கு? மறந்துட்டிங்களா?

ரமேஷ் கண்ணா, நாசர், தலைவாசல் விஜய், சம்பத் என நிறைய
நட்சத்திரங்கள் தலையை காட்டிவிட்டு செல்கிறார்கள். ரமேஷ்
கண்ணா காமெடி என்ற பெயரில் சில இடங்களில் கடுப்பேற்றுகிறார்.
கேப்டனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் , செண்டிமெண்ட், டூயட்
என படம் முழுக்க ஏகப்பட்ட காமெடியை வைத்து
கொண்டு தனியாக ரமேஷ் கண்ணா வேறு? ட்ரைலர் முழுதும்
பாத்தாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயம் இதில்
கேப்டன் டபுள் ஆக்சனா, ட்ரிபிள் ஆக்சனா என்பதுதான்.
மீனாவோடு டூயட் பாடும் கேப்டனும், மீரா ஜாஸ்மினோடு
டூயட் பாடும் கேப்டனும் ஒரு மாதிரி இருப்பதுதான் இந்த
குழப்பத்துக்கு காரணம். இருவரையும் பள்ளிக்கூட
மாணவர்கள் போல் காட்டியதுக்கு பதிலாய் ஒருவரை
கல்லூரி மாணவர் போல் காட்டி இருக்கலாம்.

இப்படி சில நிறை, குறைகள் இருந்தாலும் ட்ரைலர் முடியும்
போது ஒரு 1000 ரூபாய்க்கு டாப் அப் பண்ணி அண்ணன் ,
தம்பி, அக்கான்னு சொந்த பந்தத்துக்கெல்லாம் போன் போட்டு
பேசனும் போல ஒரு உணர்வை ஏற்படுத்தி நமக்கு தண்டசெலவு
வைப்பதில் இயக்குனர் வெற்றி கண்டு இருக்கிறார்.

பின் குறிப்பு: எங்கள் மீரா ஜாஸ்மின் ரசிகர் மன்றத்தின் சார்பில்
அவருக்கு எதிர் காலத்தில் இது போன்ற கொடுமையான
துன்பங்கள் நேரக்கூடாது என்று எல்லோரும் நாளை
10- ல் இருந்து 10.05 வரை ஒரு 5 நிமிடம்
பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.


கொஞ்சம் மொக்கதான் இருந்தாலும் பாத்து ஓட்டும்
கமெண்டும் போட்டுடுங்க.

Wednesday, April 1, 2009

முட்டாள்கள் தினம் உருவான கதை!

Posted by மின்னல்ப்ரியன் at 3:20 PM 2 comments

ஏப்ரல் ஒண்ணு வந்தாவே எல்லாரும் ஒருத்தர
ஒருத்தர் முட்டாள் ஆக்க பாக்கறோம். ஆனா
எதுக்காக இந்த தினம்?எப்படி இது உருவாச்சுன்னு
யாருக்காவது தெரியுமா? தெரியாமையே முட்டாள்தனமா
இத கொண்டாடரத விட்டுட்டு ப்ளாஷ்பேக்க முதல்ல
தெரிஞ்சுக்கங்க.

1764-ல ரோம் நாட்டோட ஒரு பகுதியா இருந்த கிரேக்க
நாட்ட ஆண்ட சான் ஆண்டனிங்கற மன்னன் ஒரு நாள்
அந்தபுரத்துல அழகிகளோட(நன்றி தினத்தந்தி ) "ஜல்சா"
பண்ணிட்டு இருக்கும்போது அத கெடுக்கறதுக்குன்னே
ஒரு அவசர நியூஸ் வந்துச்சு.. என்னடான்னு பாத்தா
அலெக்ஸ்சாண்டர் படையெடுத்து வாரதா நியூஸ்.
அந்த சமயம் அலெக்ஸ்சாண்டர் எல்லா போர்லயும்
ஜெயிச்சு ஒவ்வொரு நாடா தன்னோட சாம்ராஜியத்த
விரிவுபடுத்திட்டு இருந்தாரு. அப்படிப்பட்ட ஒரு
மாவீரன் படையெடுத்து வரான்னு தெரிஞ்சும் சான்
ஆண்டனி கொஞ்சம் கூட பயப்படவே இல்ல. அவனும்
போருக்கு தயாரானான். அவனோட முடிவு முட்டாள்தனமானது
அலெக்ஸ்சாண்டர ஜெயிக்க முடியாதுன்னு எல்லாரும்
சொல்லியும் அவன் தன் முடிவ மாத்திக்கவே இல்ல.

1764 மார்ச் மாசம் தொடங்குன போர் ஏப்ரல் ஒண்ணாம் தேதி
முடிவக்கு வந்துச்சு. சான் ஆண்டனியோட தம்மாதூண்டு
படைய அடிச்சு துவம்சம் பண்ணுனதும் இல்லாம சான்
ஆண்டனிய போர் கைதியாக்குனாரு அலெக்ஸ்சாண்டர்.
குதிரைகளும், வீரர்களும் ரத்த வெள்ளத்துல செத்து கிடந்த
அந்த போர்க்களத்துல சான் ஆண்டனி அலெக்ஸ்சாண்டர
பாத்து சொன்னான்" நீங்க மாவீரரா இருக்கலாம், உலகத்தயே
ஆட்சி செய்யலாம். ஆனா நீங்க ஒரு முட்டாள்ன்னு " உடனே அலெக்ஸ்சாண்டர் கோபத்துல கத்திய உருவிட்டு ஏன்
அப்படி சொன்னன்னு கேட்டாரு. அதுக்கு சான் ஆண்டனி
சொன்னான் இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு முட்டாள்கள்
தினம் நீ என்ன ஜெயிச்சட்டன்னு ஊருக்குள்ள போய்
சொன்னா உன்ன எல்லாரும் முட்டாள்ன்னு
சொல்லுவாங்கன்னு ....அதுக்கு அப்புறம் ....அட இன்னுமா நீங்க
இந்த கதைய உண்மைன்னு நினச்சு படிச்சுட்டு இருக்கீங்க?
அட மக்கா .....இப்படி முட்டாள் ஆயிட்டிங்களே....அய்யோ...அய்யோ .

பின் குறிப்பு: முட்டாள்கள் தினத்துக்கான உண்மையான
கதை தெரிஞ்சவங்க அப்படியே கமெண்டா
போட்டுடுங்க. நானும் தெரிஞ்சக்கவன்ல....


புடிச்சு இருந்தா ஓட்டையும், கமெண்டையும் மறக்காம
போட்டுடுங்க.