
நீ மத்தாப்பு வெடிக்கும்
அழகில் எத்தனை இதயங்கள்
சிதறிப் போகிறது தெரியுமா?
போகிற போக்கில் ஓரப்பார்வை
வீசிச் செல்லும் உன் கண்களில்
இருக்கிறது ஒளி வீசும் தீபாவளி!
உன்னை பார்த்த நாள்
முதல் உன்னையே சுற்றும்
சங்கு சக்கரமாய் ஆனேன் நான்...
தீபாவளியன்று புது தாவணியோடு
உன்னை பார்த்ததை விட சிறந்த
சிறப்பு நிகழ்ச்சியை நான் வேறு
எந்த தொலைக்காட்சியிலும் பார்க்கவில்லை.
2 comments on "தீபாவளி கவிதைகள்"
nalla than irrukku ana yaru antha figaru
avanga lovera irrukkum
Post a Comment